Chennai – Change in starting point for TNSTC SETC buses due to Diwali rush
As per The Hindu – Tamil article , Following changes are made in Chennai for bus services due to Diwali rush. Passengers who booked to board the buses towards the below destination with boarding point are also requested to board the buses from these temporary bus stands. This is applicable for 26, 27 and 28 of october.
- Buses towards Andhra would start from MTC’s Anna nagar west bus stand.
- Buses running via ECR to Pondy, cuddalore and also Kanchipuram would start from the place near to Election commission office. This is opposite to CMBT.
- Kumbakonam, Tanjore buses running via Dindivanam, Vikkravandi will start from Tambaram Sanitorium bus stand. This includes SETC buses as well.
- Buses towards Vellore, Dharmapuri, Krishnagiri, Tirupathur and Hosur via Poonamalle will start from Poonamalle bus stand.
Buses to rest of the places will start from CMBT asusual. Some changes done for pickup points. Passengers selected Tambaram/Perungalathur boarding point are requested to board from Urapakkam temporary bus stand.
முன்பதிவு செய்யும் பேருந்து கள் இயக்கப்படும் இடங்கள்:
செங்குன்றம் வழியாக ஆந் திரா செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகரில் (மேற்கு) உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை வழி யாக புதுச்சேரி, கடலூர் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சா வூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்து களும் (அரசு விரைவு போக்கு வரத்து கழகம் உட்பட) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்
பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத் தூர் மற்றும் ஒசூர் போன்ற ஊர் களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப் படும்.
மேற்கண்ட தடப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங் களில் சென்று பயணம் மேற் கொள்ளலாம். இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
வழித்தட மாற்றங்கள்
கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் நிரம்பிய பேருந்து கள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்த மல்லி, நசரத்பேட்டை, வெளி சுற்றுச் சாலை வழியாக வண்ட லூர் செல்ல வழிவகை செய்யப் பட்டுள்ளது.
முன்பதிவின்போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று, அங்கு தாங் கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் மேற் கொள்ளலாம்.
அனைத்து பேருந்து நிலையங் களுக்கும் இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும்.
வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.
இவ்வாறு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்
சிறப்பு பேருந்துகள் தொடர் பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சிறப்பு பேருந்துகளின் பட்டியல் தயாராகிவிட்டது. தற்போது, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாட்களில் சிறப்பு பேருந்துகளின் பட்டியலை வெளியிடுவோம். 26-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என்றார்.
Thank you TNSTC for ur News
LikeLike
Sir I booked ticket through online.From chennai to gudalur on 27th where the bus is actually departure from.please help.
LikeLike